flashvortex

Friday, March 16, 2012

இலங்கையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அமெரிக்கா உதவி

இலங்கையில் இடம்பெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அமெரிக்கா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனம் இந்தத் திட்டத்திற்கு உதவிகளை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை விசாரணை செய்யும் உத்தி முறைமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாலியல் வன்கொடுமைகளை விசாரணை செய்யும் தடயவியல் நிபுணர்களின் திறமைகளை மேம்படுத்தி அதன் மூலம் குற்றவாளிகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது எவ்வாறு என்பது குறித்து கொழும்பில் அண்மையில் விசேட கருத்தரங்கொன்றும் நடைபெற்றுள்ளது.
தடயவியல், இரசாயன பகுப்பாய்வு மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
ஐந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த விசேட கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதன் மூலம் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons