flashvortex

Friday, October 28, 2011

7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு



 உலக மக்கள்தொகையானது ஏழு பில்லியனை நெருங்குகிறது. இந்நிலையில் 7 பில்லியனில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிவதற்காக பிபிசி இணையத்தளம் இணைப்பொன்றை உருவாக்கியுள்ளது.பிறந்த திகதி, மாதம் மற்றும் வருடத்தை கொடுத்ததும் உங்களுக்கான நம்பரை தருகிறது அந்த இணைப்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் தரவுகளை வைத்து இவற்றை கணிப்பதாக சொல்கிறார்கள்.மேலும் Global Footprint Network, International Telecommunications Union போன்றவற்றின் தரவுகளும் இதில் பயன்படுத்தப்பட்டதாம்.

இணையதளமுகவரி

சர்வாதிகாரி கடாபி

லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்தவர்  சர்வாதிகாரி கடாபி . இவரது முழுப்பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், இத்தாலியின் கட்டுப்பாட்டில் லிபியா இருந்த போது, பிறந்தார். இவரது பள்ளிப் பருவத்தில், உலகில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக புரட்சி நடைபெற்று வந்தது. 1952ல் எகிப்து புரட்சியின் போது காமல் அப்துல் நாசர் என்பவர் அதிபர் பதவியை கைப்பற்றினார்.
           இவரது போராட்டத்தால் கடாபி ஈர்க்கப்பட்டார். 1956ல் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் கடாபி பங்கேற்றார். 1961ல் பெங்காசியில் உள்ள லிபிய ராணுவ அகடமியில் சேர்ந்தார்.
1966ல் படிப்பை முடித்தார். மேற்படிப்பை ஐரோப்பியாவில் முடித்தார். பின், லிபிய ராணுவத்தில் சேர்ந்தார். 1969, செப்., 1ல் இளம் ராணுவ அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை தனது தலைமையில் திரட்டினார். அப்போது லிபிய மன்னராக இருந்த இத்ரிஸ், மருத்துவ சிகிச்சைக்காக துருக்கியில் இருந்தார். அவருக்கு பதிலாக அவரது மருமகன் பொறுப்பில் இருந்தார். கடாபி தலைமையிலான ராணுவ குழு, அவரை வீட்டுக்காவலில் அடைத்து ஆட்சியை பிடித்தது.

போர்க் குற்றம் தொடர்பில் கிலாரி கிளின்டனிடம் கோரிக்கை

சிறீலங்காவுக்கு எதிரான போர் குற்றங்களை விலகிக் கொள்ள வேண்டாம் எனக் அமெரிக்க இராஐங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என்ற பெயரில் மேற்கண்ட கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கொள் காட்டி திவியின செய்தி வெளியிட்டுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஹிலரி கிளின்டனுக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன்னர், இந்த மகஜர் வழங்கப்பட்டுள்ளது. 

கடாபி உள்ளிட்ட மூவரின் உடல்கள் லிபியாவில் ரகசிய இடத்தில் புதைப்பு

லிபியா முன்னாள் தலைவர் கடாபி உள்ளிட்ட மூவரின் உடல்கள், நேற்று அதிகாலையில் ரகசிய இடம் ஒன்றில் புதைக்கப்பட்டன.

லிபியா முன்னாள் தலைவர் கடாபி, அவரது மகன் முட்டாசிம், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அபு பக்கர் யூனுஸ் ஜாபர் ஆகியோர், கடந்த 20ம் தேதி எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டனர். இவர்களில் கடாபி மற்றும் அவரது மகனின் மரணங்கள் சர்ச்சைக்குள்ளாயின. கடாபி மற்றும் அவரது மகனின் உடல்கள் குறித்து இடைக்கால அரசு பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வந்தது. கடாபியின் குடும்பத்தார், இருவரது உடல்களையும் தர வேண்டும் எனக் கோரியிருந்தனர்.தொடர்ந்து, கடாபி உள்ளிட்டோரின் பிரேத பரிசோதனைகள் நடந்தன.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons