flashvortex

Saturday, December 17, 2011

கடாபி மரணம்: சர்வதேச கோர்ட் விசாரிக்க கோரிக்கை


தன்னுடைய தந்தையும், சகோதரனும் கொல்லப்பட்டது குறித்து, சர்வதேச கோர்ட் விசாரிக்க வேண்டும் என, லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகள் கோரியுள்ளார்.

லிபிய முன்னாள் அதிபர் கடாபி, கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி, போராட்டக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகன் முட்டாசிம் கடாபியும் கொல்லப்பட்டார். கடாபியின் மனைவி சபியா, மகள் ஆயிஷா உள்ளிட்டோர், அல்ஜீரியாவில் மனிதாபிமான அடிப்படையில், தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கை அறிக்கை பற்றி மனித உரிமை அமைப்புகள் விமர்சனம்

இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி மகிந்தவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சர்வதேச மனித உரிமை உரிமை அமைப்புக்கள் கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டுள்ளன.

கிரிகோர் மெண்டல் (மரபியலின் தந்தை)

மனுகுலம் உண்மையாக வளர்ச்சி அடையத் தொடங்கியது எப்போது? என்று கேட்டால் அதற்கு அறிஞர்களின் பதில் ஒன்றாகத்தான் இருக்கும். மனிதன் எப்போது 'ஏன்' என்று கேள்விக் கேட்கத் தொடங்கினானோ அப்போதுதான் மனுகுலம் முன்னேறத் தொடங்கியது. உலகில் இதுவரை நிகழ்ந்திருக்கும் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அத்தனைக்கும் வித்திட்டது 'ஏன்' என்ற கேள்விதான், விதண்டாவாதத்துக்காக எழுப்ப பட்ட கேள்விகள் அல்ல. புரியாததை புரிந்துகொள்வதற்காகவும், அறியாததை அறிந்து கொள்வதற்காகவும் கேட்கப்பட்ட கேள்விகள். அவ்வாறு எழுந்த ஒரு கேள்விதான் ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் ஏன் ஒரே சாயலாக இருக்கின்றன என்பது.

வரலாற்று நாயகர்! பேரரசர் அசோகர் (The Great Indian Emperor)

உலக வரலாறு குறித்து வைக்கப்படத் தொடங்கியக் காலத்திலிருந்து எத்தனையோ மாமன்னர்களையும், வீர அரசர்களையும் சந்தித்திருக்கிறது சரித்திரம். பெரும்பாலான மன்னர்கள் பிற தேசங்களை கைப்பற்றியதால் வரலாற்றை வசமாக்கினர். வேறு சிலர் கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரலாற்றில் இடம் பிடித்தனர். இன்னும் சிலர் அரச வம்சத்தில் பிறந்தோம் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசாண்டு முடித்தனர். இப்படி எல்லா மன்னர்களையும் அவர்கள் மனுகுலத்திற்கு ஆற்றிய சேவைகள் மற்றும் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு வரிசைப்படுத்தினால் ஒருவர் முதல் நிலையை பிடிக்கக்கூடும். உலக வரலாற்றில் ஆயிரமாயிரம் மன்னர்கள் தங்களை தாங்களே மாட்சிமைப் பொருந்திய என்றும், கம்பீரம் நிறைந்த என்றும், மாமன்னன் என்றும் அழைத்துக்கொண்டனர். அவர்கள் அனைவருமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மின்னி மறைந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் வரலாறு நிலைக்கும் வரை மின்னுவார். என்று கூறுகிறார் ஹெச்.டி.வெல்ஸ் (H.T.WELLS), ஓர் ஆங்கில இலக்கிய மேதை போற்றிய அந்த இந்திய மன்னனின் பெயர் அசோகர்.

பிளேட்டோ (தத்துவஞானி) - வரலாற்று நாயகர்!

தத்துவம் என்பதை ஆங்கிலத்தில் Philosophy என்கிறோம். Philos, Sophia என்ற இரண்டு லத்தீன் சொற்களால் உருவானதுதான் Philosophy என்ற சொல். Philos என்றால் அறிவு, Sophia என்றால் நேசிப்பது. எனவே அறிவை நேசிப்பதுதான் தத்துவம் என்றாகிறது. அப்படி அறிவை நேசித்து அந்த நேசத்தை பரப்பியவர்களைதான் மாபெரும் தத்துவஞானிகளாக உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவ மேதை சாக்ரடீஸின் சிந்தனையாலும், பேச்சாலும் கவரப்பட்ட பல இளையர்களுள் ஒருவர்தான் பிளேட்டோ. கிமு 427 ஆம் ஆண்டு ஏதென்ஸில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார் பிளேட்டோ. ஆனால் செல்வத்தின் மீது ஈடுபாடு இல்லாமலேயே வளர்ந்தார். இசையிலும், ஓவியத்திலும் அவருக்கு அதிக ஈடுபாடு இருந்தது. கவிதைகளும் எழுதுவார்.


 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons