flashvortex

Sunday, October 30, 2011

சிறீலங்காவை கடுமையாக எச்சரிக்கும் கனடா



Paristamilசிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கனடா அதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என கனடா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் சந்திப்புக்கு முன்னர், குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சரியான தீர்வு வழங்கப்பட வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்காவின் மனித உரிமை விவகாரத்தில் கனடா வெறுமனே வார்த்தைகளினால் கருத்துக்களை வெளியிட்டு அமைதி காக்காது என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய் தெரிவித்துள்ளார்.

சரண் அடைகிறார் கடாபி மகன்:ஐ.சி.சி.,யுடன் பேச்சுவார்த்தை




Paristamilலிபியாவின் மறைந்த முன்னாள் தலைவர் கடாபியின் மகன்களுள் ஒருவரான சயீப் அல் இஸ்லாம், 39, சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் (ஐ.சி.சி.,) உள்ள தனது வழக்கில் சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறார். "லிபியாவில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது' என அவர் கூறியதாக ஐ.சி.சி.,யின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் கடாபி ஆட்சிக்கு எதிராக நடந்த மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது ராணுவத்தை ஏவி வன்கொலைகளில் ஈடுபட்டதற்காக, கடாபி மற்றும் சயீப் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், இருவரையும் கைது செய்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.மக்களுக்கு எதிரான குற்றவியல் செயல்களில் மறைமுகமாக கூட்டுச் சதியில் ஈடுபட்டது, கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலான நாட்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியது ஆகிய குற்றங்கள் சயீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons