flashvortex

Monday, January 16, 2012

சென்னை எழிலகத்தில் தீ:பலி 1: இருவர் காயம் ; வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்

Paristamilசென்னை சேப்பாக்கில் உள்ள அரசு அலுவலகம் இயங்கும் எழிலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை எதுவும் அறியப்படவில்லை. இருப்பினும் இந்த தீயில் சதிச்செயல் இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவில் தங்கியிருந்து பணியாற்றும் ஊழியர்கள் கூட யாரும் இல்லை. இந்நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் இந்த தீ விபத்து நடந்திருக்கிறது.தீ பிடித்த இந்த கட்டடத்தில் காவலர்கள் யாரும் இருந்தனரா, இல்லையா என்றும் தீ பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத்தாலியில் சொகுசு கப்பல் மூழ்கியது: மூன்று பேர் பலி

Paristamilஇத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய பயணிகள் கப்பல் ஒன்று தரை தட்டி கவிழ்ந்த விபத்தில், மூன்று பேர் பலியாகினர். எனினும், கப்பலில் இருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இத்தாலியைச் சேர்ந்த கோஸ்டா கான்கொரிடா என்ற கப்பல், 450 மில்லியன் யூரோ செலவில் கட்டப்பட்டு, 2006 முதல் பயணிகள் கப்பலாக செயல்படத் துவங்கியது. "டைட்டானிக்' கப்பல் போன்ற இக்கப்பலில், ஐந்து உணவு விடுதிகள், 13 மதுபான விடுதிகள், நான்கு நீச்சல் குளங்கள், ஜாக்குஸ்ஸி நிறுவனத்தின் ஆடம்பரமான ஐந்து நீச்சல் தொட்டிகள், 6,000 ச.மீ., பரப்பளவில் உடற்பயிற்சிக் கூடம், தியேட்டர், சூதாடும் அரங்கம், டிஸ்கோ அரங்கம் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளன. இதில், மொத்தம், 3,780 பயணிகள் செல்லலாம்.

இலங்கையை தண்டிக்கும் இயற்கை : நுவரெலியாவில் ஐஸ் கட்டி மழை!

Paristamilநுவரெலியா மாவட்டத்தில் இன்று (16) காலை வேளையில் ஆங்காங்கே பனிமழை (ஐஸ் கட்டி மழை) பெய்துள்ளதுடன் ஆகக்குறைந்தளவான 3.8 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

அண்மைக் காலங்களில் இலங்கையில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலையாக இது கருதப்படுகிறது.

இந்திய அணியால் அயல்நாடுகளில் வெற்றி கொள்ள முடியாது : கங்கூலி

இப்போதுள்ள இந்திய அணியால் அயல்நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்கூலி தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் எந்த ஒரு அணியும் இவ்வளவு நீண்ட காலம் அயல்நாடுகளில் இவ்வளவு மோசமாக விளையாடியதில்லை. இரண்டாவது இன்னிங்சில் சரணாகதியடைந்ததை பார்க்க வேதனையாக இருந்தது. இது எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும் இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது இந்த அணி அயல்நாடுகளில் வெல்ல முடியாது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons