
டெஸ்ட் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல ஜெயவர்த்தன அடைந்துள்ளார்.சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் பத்தாயிரம் ரன்களைக் கடந்துள்ள ஒன்பதாவது வீரர் இவர்.தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையில் டர்பனில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளன்று மஹேல ஜெயவர்த்தன இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான 34 வயதுடைய ஜெயவர்த்தன, 127 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்களையும், 40 அரைசதங்களையும் அடித்துள்ளார்.




6:16 AM
jana
Posted in: 




