flashvortex

Tuesday, December 27, 2011

டெஸ்டில் பத்தாயிரம் ரன்கள்: மஹேல ஜெயவர்த்தன சாதனை


டெஸ்ட் ஆட்டங்களில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல ஜெயவர்த்தன அடைந்துள்ளார்.சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் பத்தாயிரம் ரன்களைக் கடந்துள்ள ஒன்பதாவது வீரர் இவர்.தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகளுக்கு இடையில் டர்பனில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாளன்று மஹேல ஜெயவர்த்தன இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.இலங்கையின் முன்னாள் அணித்தலைவரான 34 வயதுடைய ஜெயவர்த்தன, 127 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்களையும், 40 அரைசதங்களையும் அடித்துள்ளார்.

சச்சினின் நூறாவது சதத்தை எடுக்கவிடமாட்டோம்


இந்தியா, அவுஸ்திரேலியா விற்கிடையிலான டெஸ்ட் தொடரின் முதாலாவது போட்டி நாளை மெல்போர்ன் நகரில் ஆரம்பமாகவுள்ளது. இப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 100ஆவது சதத்தை அவுஸ்திரேலியாவில் எடுக்க விடமாட்டோம். முழு அணியும் சேர்ந்து அந்த முயற்சியை தடுக்கும் என அணியின் துணைத் தலைவர் பிராட் ஹாடின் கூறியுள்ளார்.

2020ல் உலகின் ஐந்தாவது இடத்தில் இந்தியா : பொருளாதார ஆய்வு மையம் தகவல்


இந்தாண்டில், பொருளாதார வளர்ச்சியில், பிரிட்டனை, பிரேசில் முந்திவிட்டது எனவும், 2020ல் உலகின் முதல் 10 உலக நாடுகளில், ஐந்தாவது இடத்திற்கு, இந்தியா வந்துவிடும் எனவும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும், பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட உலகின் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் பட்டியலில், இதுவரை ஆறாவது இடத்தில் இருந்த பிரிட்டனை, பிரேசில் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

முதன் முதலாக அப்பிளின் தந்தைக்கு ஒரு சிலை



அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரும், தொழில்நுட்ப உலகில் தனி முத்திரை படைத்து ஜாம்பவானாகத் திகழ்ந்தவருமான ஸ்டீவ் ஜொப்ஸ் புற்று நோயுடன் கடந்த பல மாதங்களாகப் போராடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்தார்.


தொழில்நுட்ப உலகிற்கு இது மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகின்றது.



இந்நிலையில் அவரை கௌரவிக்கும் முகமாக ஸ்டீவ் ஜொப்ஸின் உருவச் சிலையொன்று புடாபெஸ்ட் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


உயர்தர பரீட்சை முடிவுகள் ஏற்படுத்திய அதிர்வலைகள்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான க.பொ.த.உயர்தரப் பெறுபேறுகளில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக மாணவர்களிடையே பெரும் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது பெறுபேறுகளையிட்டும் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே குறிப்பிட்ட பெறுபேறுகளை வெளியிடுவதில் பெரும் இழுத்தடிப்புகள் பேரம் பேசல்கள் என பல சர்சைகளின் அடிப்படையில், பெறுபேறுகள் நள்ளிரவு நேரம் இனையத்தளத்தில் வெளியிடப்பட்டதுடன் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று பெறுபேறுகள் பரீட்சைத் தினைக்களத்தினால் அதிபர்களிடம் கையளிக்கப்படாத நிலமையும் காணப்பட்டது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons