flashvortex

Wednesday, March 14, 2012

"சீனாவில் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை"

சீனாவில் மேலும் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்று அதன் பிரதமர் வென் ஜியா போ கோரியுள்ளார்.
தமது நாடு பெற்று வரும் பொருளாதார நன்மைகளை பாதுகாக்க இந்தச் சீர்திருத்தங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவ முறையும், நாட்டின் தலைமை முறையும் மாற வேண்டும் என வென் ஜியா போ கூறியுள்ளார்.
அப்படியான சீர்திருத்தம் ஏற்படாவிட்டால், 1960 களில் கலாச்சாரப் புரட்சியால் ஏற்பட்ட துயரம் மீண்டும் ஏற்படும் அபயாம் உள்ளது என்றும் வென் அவர்கள் எச்சரித்துள்ளார்.

போர் குற்றங்கள்:சர்வதேச நீதிமன்றத்தின் முதல் தீர்ப்பு

காங்கோவின் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான தாமஸ் லுபாங்கா போர் குற்றங்கள் புரிந்தார் என்று தீர்ப்பு வந்துள்ளது.
தி ஹேகிலிருந்து செயல்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பத்தாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட நிலையில் வழங்கியுள்ள முதல் தீர்ப்பில் தாமஸ் லுபாங்கா குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளது.
பதினைந்து வயதுக்கு கீழேயுள்ள சிறார்களை படைகளில் சேர்த்து, அவர்களை சிறார் போராளிகளாக பயன்படுத்தினார் என்பதான குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்க கோரி அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

போலீஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க உறுதியான சட்டம் தேவை என்பதை வலியுறுத்தி, வரும் 18ம் தேதி அன்னா ஹசாரே டில்லியில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.
வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்திய காந்தியவாதி அன்னா ஹசாரே, 74. கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினார். ஆனால், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால், போராட்டத்தை தொடர முடியவில்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பலை பிடிக்க முயன்ற, நரேந்திரகுமார் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கடந்த வாரம் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். போலீஸ் அதிகாரிகளைப் பாதுகாக்க உறுதியான சட்டம் தேவை என்பதை வலியுறுத்தித்தான் அன்னா ஹசாரே, வரும் 18ம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார். இப்போராட்டத்தில் பங்கேற்க கொலை செய்யப்பட்ட, போலீஸ் அதிகாரி நரேந்திரகுமாரின் குடும்ப உறுப்பினர்களையும், அன்னா குழு அழைத்துள்ளது.

ஜூனுக்கு பின் மின்வெட்டு படிப்படியாக குறையும் : மின்துறை அமைச்சர் தகவல்

வரும் ஜூன் மாதத்திற்குப் பின், படிப்படியாக மின்வெட்டு குறையும். அடுத்த ஆண்டு மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், வரும் 2014ம் ஆண்டு, தேவைக்கு மீறிய மின் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் தமிழகம் மாறும்'' என்று, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.மரபுசாரா எரிசக்தி குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது.
கருத்தரங்கை துவக்கி வைத்த, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தென்மாநிலங்களில் கடும் மின் பற்றாக்குறை உள்ளது. இதில், தமிழகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை தீர்க்க, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரும் ஜூன் மாதம் முதல், மின்வெட்டு படிப்படியாக குறையும். 2013-14ம் ஆண்டில் மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும். 2014-15ம் ஆண்டு, தேவைக்கு மீறிய மின் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் தமிழகம் மாறும். இந்த நிலையை எட்ட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமான மின் உற்பத்தியை பெறுவது முக்கியமாகும். தமிழகத்தில் மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில், பல்வேறு இடையூறுகள் உள்ளன.

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: என்ன செய்யப் போகிறது தி.மு.க.,?

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், மத்திய அரசு போகிற போக்கைப் பார்த்தால், இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிக்கும் போல் தெரிகிறது. இதனையடுத்து இநத விவகாரத்தில் தி.மு.க., என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்ன என்று, லோக்சபாவிலும், தி.மு.க., அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கூச்சல், ரகளையில் இறங்கினர். ஆனால், பிரணாப் முகர்ஜி பேச ஆரம்பித்ததும், திமுக எம்.பி.,க்கள் இருக்கைகளுக்கு திரும்பினர். அ.தி.மு.க.,வினரும் அமைதியாயினர். ஆனால், "எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது' என்று, பிரணாப் முகர்ஜி பதிலளித்தார்.

ஒரே குரலில் அ.தி.மு,க., - தி.மு.க.,: இலங்கை பிரச்னையில் ராஜ்யசபாவில் பெரும் அமளி

இலங்கைக்கு எதிராக ஐக்கியநாடுகள் சபையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில், இந்தியாவின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்தியே ஆகவேண்டுமென்று, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் பார்லிமென்டில் வலியுறுத்தின. போர்க்குற்றம் புரிந்த இலங்கையை, இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று இரு கட்சிகளின் எம்.பி.,க்களும் குரல் கொடுத்தனர். இதனால் கேள்வி நேரமும் ரத்தாகி, அடுத்தடுத்து ஒத்திவைப்புகளும் நடந்தன. நாள்பூராவும் ராஜ்யசபாவை ஒத்திவைக்க நேர்ந்தது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons