flashvortex

Saturday, March 3, 2012

பெரியாறு அணையைப் பராமரிக்க தமிழகத்துக்கு அனுமதி: நீதிமன்றில் மனு _

 தமிழகம், கேரளா இடையேயான முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றில் நேற்று 2 புதிய மனுக்களைத் தாக்கல் செய்தது.

ஒரு மனுவில்,

'முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மே மாதத்துக்குள் உடனடியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு அதிகாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை. 

ஜெனிவாவில் தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டாலும் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிடினும் விசாரிக்கலாம்: அமைச்சர் விமல்

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டாலும் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய மேலும் மூன்று வழிமுறைகள் சர்வதேசத்திடம் உள்ளன. எனவே சர்வதேச விசாரணைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களால் மாத்திரமே முடியும் என்று அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். 

சிரியா: செஞ்சிலுவைச் சங்க உதவிப் பணியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

சிரியாவின் ஹோம்ஸ் நகரத்தில் பாபா அம்ர் வட்டகைக்குள் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிப் பணியாளர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
அந்த வட்டகையில் நிறைய பேர் உதவியை பெரிதும் நம்பிக் காத்திருக்கிறார்கள் என்பதால் தங்களுக்கு அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு முடிவு என செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏழு டிரக் வண்டிகளில் உணவு மற்றும் மருத்துவ உதவிப் பொருட்கள் கொண்டதாக இந்த வாகனத் தொடரணி அமைந்துள்ளது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons