flashvortex

Friday, January 13, 2012

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தயராகும் டோனி

2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரில் தான் விளையாடுவதாக இருந்தால் அடுத்த வருடத்துடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறக்கூடும் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திரசிங் டோனி கூறியுள்ளார்.'2015 ஆம் ஆண்டு (உலகக் கிண்ண) போட்டிகளில் நான் விளையாடுவதாக இருந்தால் மற்றைய வகைப் போட்டியிலிருந்து நான் ஓய்வுபெற வேண்டியிருக்கும்' என அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது டோனி கூறினார்.
 

இந்திய கிரிக்கட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்த சச்சின்!

பத்து மாதங்களாகவே தன்னுடைய 100வது சதத்தை அடிக்க முடியாமல் சற்று தடுமாறி வருகிறார் சச்சின்.அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்திற்கு முன்பே அவர் சதம் அடிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
ஏனெனில் அப்போது தான் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவருக்கு நெருக்கடி இருக்காது என கிரிக்கட் விமர்சகர்களும் கூறினர்.
 
இருந்தபோதிலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons