flashvortex

Thursday, April 5, 2012

ஒலிம்பிக்குக்காக லண்டன் செல்வோர் திருமணம் செய்ய தடை !


பிரிட்டனில் இவ்வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக செல்லும் விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கு திருமணம் செய்துகொள்வதை பிரித்தானிய அதிகாரிகள் தடை செய்யவுள்ளனர். வெளிநாட்டவர்கள் பிரிட்டனில் வதிவிட உரிமை பெறுவதற்காக ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். ஜூலை 27 முதல் ஓகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலுள்ள நாடுகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேருக்கு 6 மாத காலத்திற்கான பிரித்தானிய விஸா வழங்கப்படவுள்ளது.

பாம்பை பதம்பார்க்கும் அதியச சிலந்தி ஆபிரிக்காவில் !

ஆபிரிக்காவில் இருக்கும் ஒருவகை சிலந்திகள் பாம்பையே கொல்ல வல்லது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வகையான சிலந்திகள் தமது இரையைக் கொலைசெய்ய தமது நச்சுத்தன்மையுள்ள கொடுக்கைப் பயன்படுத்துவது இல்லை. சிலந்தி வலைகளையே பயன்படுத்துகிறது. பொதுவாக சிலந்திவலை என்றால் நாம் நினைப்பதுபோல மென்மையாக இருக்கும். அதில் பூச்சிகளும் சிறு புழுக்களும் சிக்கிக்கொள்ளும். ஆனால் பாம்பு சிக்கிக்கொள்ளுமா ? அவ்வளவு தூரம் கடினமான சிலந்திவலைகளை நீங்கள் பார்த்தது உண்டா ? ஆம் இங்கே காணப்படும் சிலந்திவலையானது மிக மிகக் கடுமையானது. இதில் பாம்பு சிக்கிக் கொண்டால் கூட அசையமுடியாத நிலை தோன்றும்.

இங்கிலாந்து அபார ஆட்டம் * இலங்கை திணறல்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், கேப்டன் ஸ்டிராஸ், அலெஸ்டர் குக் அரைசதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி முன்னிலை நோக்கி செல்கிறது. சொந்த மண்ணில் இலங்கை பவுலர்கள் சோபிக்கத்தவறினர்.
இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்திருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் : டக்ளஸ் தேவானந்தா

ஐ.நா மனித உரிமை பேரவை விவகாரம் தொடர்பில், இலங்கை பாரளுமன்றில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளனர்.

ஈ.பி.டி.பி கட்சியின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இவ்விவாதத்தில் தெரிவிக்கையில், உண்மையை கண்டரியும் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்குழுவின் அறிக்கையில் தமக்கும், தமது கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் விமர்சனங்கள் இருந்துள்ளன. ஈ.பி.டி.பி கட்சியை ஓர் துணை இராணுவ குழுவாக அறிவித்தல் என்பது ஏற்றுக்கூடியதல்ல என தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையிடம் அணுசக்தி- நீர்மூழ்கிக் கப்பல்

அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துகொண்டுள்ளது.
சுமார் 100 கோடி டாலர்கள் பெறுமதியான இந்த ரஷ்யத் தயாரிப்புக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது.
இப்போது அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொண்டுள்ளது.முன்னதாக,சோவியத் தயாரிப்பு- நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா 1991ம் ஆண்டுவரை பயிற்சித் தேவைகளுக்காக வைத்திருந்தது.

எல்எல்ஆர்சி முன் சாட்சியமளித்த பெண் அச்சத்தில்

இலங்கை அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை என்ற கணவனை இழந்தப் பெண், எதிர்வரும் சனிக்கிழமையன்று விசாரணைக்கு வரவேண்டுமென்று கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பரிவு கல்முனை பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் கொழும்பு செல்ல மறுத்தார்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons