அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துகொண்டுள்ளது.
சுமார் 100 கோடி டாலர்கள் பெறுமதியான இந்த ரஷ்யத் தயாரிப்புக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது.
இப்போது அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொண்டுள்ளது.முன்னதாக,சோவியத் தயாரிப்பு- நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா 1991ம் ஆண்டுவரை பயிற்சித் தேவைகளுக்காக வைத்திருந்தது.