flashvortex

Tuesday, April 3, 2012

சிறீலங்காவிற்கு மற்றுமொரு கடன் தொகையை வழங்க, சர்வதேச நாணய நிதியம் தீர்மானம்

சர்வதேச நாணய நிதியம் சிறீலங்காவிற்கு அங்கீகரித்துள்ள கடன் திட்டத்தின் கீழ் மற்றுமொரு கடன் தவணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனின் பெறுமதி 426.8 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்காவின் பொருளாதார நிலை தொடர்பான ஏழாவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் இந்தக் கடன் தொகையை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் சிறீலங்காவிற்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 2.56 பில்லியன் டொலர்களில் இதுவரை 2.13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons