 நுவரெலியா மாவட்டத்தில் இன்று (16) காலை வேளையில் ஆங்காங்கே பனிமழை (ஐஸ் கட்டி மழை) பெய்துள்ளதுடன் ஆகக்குறைந்தளவான 3.8 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கையில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலையாக இது கருதப்படுகிறது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் சில நாட்களுக்கு குளிர் காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் கூறியுள்ள நிலையில், கொழும்பிலும் இன்று காலை தொடக்கம் குளிருடனான காலநிலை நிலவுகிறது. |
0 comments:
Post a Comment