flashvortex

Monday, May 7, 2012

சிறிலங்கா விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கு விளக்கம் அளிக்கும் இந்தியா


சிறிலங்காவில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க இந்தியா எடுத்துவரும் காத்திரமான நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க இராஐங்க அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கவுள்ளாரென இந்திய உயர் மட்ட இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து இந்தியாவிற்கு நேற்று சென்றடைந்த திருமதி ஹிலாரி கிளின்டன் இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார். 

இன்றைய சந்திப்பின் போது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலான நிலைவரம் குறித்தும் ஹிலாரியிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா எடுத்துரைப்பாரென்று இந்திய உயர்மட்ட இராஜதந்திர தரப்புத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

சிறிலங்காவின் இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா அக்கறையுடன் செயற்பட்டு வருவதும், அண்மையில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவிற்கு மேற்கொண்ட விஐயம் தொடர்பிலும் அமெரிக்க இராஐங்க அமைச்சருக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, சிறிலங்காவின் விடயத்தில் அமெரிக்காவுடன், அதன் ஆலோசனையின்படியே செயற்பட புதுடில்லி விரும்புவதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய விஐயத்திற்கு முன்னர் ஹிலாரி கிளின்டன், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான விஐயத்தினை மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons