flashvortex

Thursday, March 8, 2012

புடின் வெற்றியை எதிர்த்து போராட எதிர்க் கட்சிகள் முடிவு

ரஷ்ய அதிபர் தேர்தலில், புடின் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொடர் போராட்டம் நடத்த, எதிர்க் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

ரஷ்யாவில், கடந்த 4ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில், பிரதமர் புடின் மூன்றாவது முறையாக, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் நடந்த ரஷ்ய பார்லிமென்ட் தேர்தலில், ஏராளமான தில்லு முல்லு நடந்தது. இதே போல, தற்போது நடந்த தேர்தலிலும், புடின் ஆதரவாளர்கள் நிறைய தில்லு முல்லு செய்து ஓட்டு போட்டதாக, எதிர்க் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தேர்தலின் போது நடந்த தில்லு முல்லுகளை எதிர்த்து போராட்டம் நடத்திய, 250 பேர் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையே, முறைகேடாக வெற்றி பெற்றுள்ள புடினின் வெற்றியை எதிர்த்து, தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும், எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் தொடரும்' எனவும், போராட்டத் தலைவர் அலெக்சி நாவால்நி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons